Friday, May 05, 2017

மாடு காட்டி என்னை நீ மதிமயக்கலாகுமோ

  கடந்த முப்பது வருடங்களில் குறைந்தது பத்து முறையாவது குடி பெயர்ந்தாயிற்று. வெவ்வேறு ஊர்கள், வீடுகள், பலவிதமான அனுபவங்கள். ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. அது என்னோடு சேர்ந்து வரும் பழைய குப்பைகள். ஒவ்வொரு முறை வீட்டைக் காலி செய்யும் போதும் விடாப்பிடியாக ஒட்டிக் கொள்ளும் இவற்றைத் தூக்கிப் போட மட்டும் மனம் ஒப்புக் கொள்வதே இல்லை. கல்லூரி நாட்களில் எழுதிய ரெகார்டுகள், ப்ராஜெக்ட் ரிப்போர்ட், ஆராய்ச்சி குறிப்புகள் இத்யாதி. கூகிள் இல்லாத காலமாதலால் நூலகங்களைச் சுற்றி அவைகளை சேகரிக்க பட்டபாடு மனதில் நிழலாடும். மூன்று அலமாரி புத்தகங்கள், பழைய கெசட்டுகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த பலவீனத்தை அறிந்து தான் இப்பொழுதெல்லாம் கண்காட்சிகளுக்கு போவதேயில்லை. அதனால் இன்னமும் குப்பை தான் சேரும் என்பது என் கருத்து.

   நம்முடைய மனமும் இப்படித்தான் விஷய குப்பைகளை போட்டு நிறைத்து கொள்கிறது.