Tuesday, December 26, 2017

பன்றியும் பசுமுசு வானரம்

பழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : 

சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் 
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள் 

இப்படி ஆயிரம் ஆயிரம் குணங்கள் எழுவது ஏன் ?
 எப்படி ஆயிரமாயிரம் வர்ணங்கள் மூன்று அடிப்படை வர்ணங்களான (Primary colours)  சிவப்பு மஞ்சள் நீலம் என்பனவற்றின் பலவித கலவைகளாக உருவெடுத்தனவோ அப்படியே தாமசம், ரஜசம் சத்துவம் என்ற மூன்று அடிப்படை குணங்களின் கலவைகளாக மனிதர்களின் ஆயிரம் குணங்களை கொள்ளலாம்.

Thursday, June 01, 2017

ஆனையை விழுங்கிய ஆடு


   வட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு  முன்  இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். பாமினி சுல்தான்கள் அரசாட்சியில் பல பகுதிகளும் இருந்ததால் கணிசமான இசுலாமிய ஜனத்தொகையும் காணப்பட்டது. அங்கே கோவிந்தபட்டர் என்ற ஞானி எதற்கும் கவலைப்படாதவராய் ஜாதி பேதம் பார்க்காது அழைத்தவர் இல்லங்களுக்கெல்லாம் சென்று அவர்களின் விருந்தோம்பலை ஏற்று தன்மனம் போன போக்கில் திரிந்து வந்தார்.

Friday, May 05, 2017

மாடு காட்டி என்னை நீ மதிமயக்கலாகுமோ

  கடந்த முப்பது வருடங்களில் குறைந்தது பத்து முறையாவது குடி பெயர்ந்தாயிற்று. வெவ்வேறு ஊர்கள், வீடுகள், பலவிதமான அனுபவங்கள். ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. அது என்னோடு சேர்ந்து வரும் பழைய குப்பைகள். ஒவ்வொரு முறை வீட்டைக் காலி செய்யும் போதும் விடாப்பிடியாக ஒட்டிக் கொள்ளும் இவற்றைத் தூக்கிப் போட மட்டும் மனம் ஒப்புக் கொள்வதே இல்லை. கல்லூரி நாட்களில் எழுதிய ரெகார்டுகள், ப்ராஜெக்ட் ரிப்போர்ட், ஆராய்ச்சி குறிப்புகள் இத்யாதி. கூகிள் இல்லாத காலமாதலால் நூலகங்களைச் சுற்றி அவைகளை சேகரிக்க பட்டபாடு மனதில் நிழலாடும். மூன்று அலமாரி புத்தகங்கள், பழைய கெசட்டுகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த பலவீனத்தை அறிந்து தான் இப்பொழுதெல்லாம் கண்காட்சிகளுக்கு போவதேயில்லை. அதனால் இன்னமும் குப்பை தான் சேரும் என்பது என் கருத்து.

   நம்முடைய மனமும் இப்படித்தான் விஷய குப்பைகளை போட்டு நிறைத்து கொள்கிறது.